News April 27, 2025
காஞ்சிபுரம் ஊராட்சிகளுக்கு பறந்த கலெக்டரின் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். மிக முக்கியமாக மக்கள் பார்வையிட ஊராட்சி தகவல் பலகையில் வரவு செலவு எழுதிடவும், வரவு செலவு கணக்கு குறித்து பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
காஞ்சிபுரம்: B.Sc, BBA, MBA முடித்தவர்களுக்கு IRCTC-ல் வேலை

▶️இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
▶️மொத்த பணியிடங்கள்: 64
▶️கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
▶️சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
▶️ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 25, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உள்ளாட்சிகள் தினமான நவ.01 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டங்களில் விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News October 25, 2025
காஞ்சிரம் அருகே புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை!

காஞ்சி, கண்ணந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்(25). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்ததால் திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட மகேஷ், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


