News August 16, 2024

காஞ்சிபுரத்தில் 42 மாதங்களில் 2952 பெண்கள் கருக்கலைப்பு

image

காஞ்சிபுரத்தில் கடந்த 42 மாதங்களில் 2952 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து பேரிடர் கூட்டம்

image

இன்று காஞ்சிபுரத்தில் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் ஆலோசனை நடத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

News September 18, 2025

தமமுக காஞ்சி நிர்வாகி மறைவு – ஜான் பாண்டியன் இரங்கல்

image

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரியாஸ் மாலிக் மறைவு குறித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ரியாஸ் மாலிக் மறைவு கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவனடி சேர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

News September 18, 2025

பாஜக obc அணியின் மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

image

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் படி obc அணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முன்னாள் மாவட்டத் துணைத் தலைவரான A.செந்தில்குமார் என்பவரை obc அணியின் மாநில துணை தலைவராக நியமித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!