News August 25, 2024
காஞ்சிபுரத்தில் 2303 வீடுகளுக்கு ரூ.14 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரத்தில் குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2000 – 01ம் நிதி ஆண்டிற்கு முன், கட்டிய வீடுகளில் பெரும்பாலான வீடுகள், சுவர் விரிசல், கூரை என, பல்வேறு நிலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதில் 2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க தற்போது ஊரக வளர்ச்சித்துறை நிர்வாக அனுமதி அளித்து 14 கோடி ஒதுக்கியுள்ளது.
Similar News
News November 1, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்டோபர். 31) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
காஞ்சிபுரத்தின் பழமையான கோயில் இதுதான்!

காஞ்சிபுரத்தின் தேவார வைப்புத்தலமாகுமாக கருதப்படும் “கைலாசநாதர் கோயில்”, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மற்றும் பாரம்பரிய திராவிடக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது கி.பி. 700-ல் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது காஞ்சிபுரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
News October 31, 2025
காஞ்சிபுரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

காஞ்சி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


