News April 21, 2025

காஞ்சிபுரத்தில் வாட்டி வதைக்கும் வெயில்

image

காஞ்சிபுரத்தில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 16, 2025

காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை ஊராட்சி மற்றும் தண்டலம் ஊராட்சி திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் செங்காடு ஊராட்சி ஆகிய இடங்களில் செப்டம்பர் 16 காலை 9 மணி முதல் தொடங்கி உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News September 15, 2025

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 418 மனுக்கள் – ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற ஆட்சியர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து 418 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News September 15, 2025

காஞ்சியில் புதிய கட்சி தொடங்கிய மல்லை சத்யா

image

இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழாவில் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்தவர் கட்சியின் பெயரை நவ.20ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். கருத்துவேறுபாடு காரணமாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மல்லை சத்யா இன்று புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

error: Content is protected !!