News March 25, 2025
காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில், முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. சுமார் 5,000 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளன. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 16, 2025
காஞ்சி: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

காஞ்சிபுரத்தில் அக்டோபர் 15 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
காஞ்சிபுரம் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

காஞ்சிபுரம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <
News October 15, 2025
காஞ்சி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

காஞ்சி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)