News August 8, 2024
காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
Similar News
News December 20, 2025
காஞ்சிபுரத்தில் இன்று மின் தடை!

ஓரிக்கை துணை மின் நிலையத்தில் இன்று(டிச.20) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டலம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, எண்ணைக்காரத்தெரு, காந்தி ரோடு, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, கலெக்டர் ஆஃபிஸ், சங்குசா பேட்டை போன பகுதிகளில் காலை 9 – மாலை 4 வரை மின் ரத்து. <<18618921>>தொடர்ச்சி<<>>
News December 20, 2025
காஞ்சிபுரம்: மின் தடைப் பகுதிகள்!

நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், தொடுர், மேல்மதுரமங்கலம், சிங்கில்பாடி, கண்ணந்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், சிங்கவாடிவாக்கம், சின்னிவாக்கம் மருதம், பரந்தூர் மறும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


