News April 20, 2025

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

image

உத்திரமேரூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக 1.2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அர்ஜுனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News November 18, 2025

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

image

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மகா கும்பாபிஷேக விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ் வழியில் அர்ச்சனை உள்ள நிலையில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த மனு அளித்தனர்.

News November 18, 2025

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

image

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மகா கும்பாபிஷேக விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ் வழியில் அர்ச்சனை உள்ள நிலையில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த மனு அளித்தனர்.

News November 17, 2025

காஞ்சியில் நாளை மின்தடை!

image

காஞ்சிபுரம்: ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை(நவ.18) பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், கலெக்டர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை போன்ற பகுதிகளில் நாளை(நவ.18) காலை 9:00 – 4:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!