News April 20, 2025
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

உத்திரமேரூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக 1.2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அர்ஜுனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News January 9, 2026
காஞ்சிபுரத்தில் திடீர் மாற்றம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் குண்டுகுளம், உத்திரமேரூர் வட்டத்தில் கடல்மங்கலம், வாலாஜாபாத் வட்டத்தில் ஆற்ப்பாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூர், குன்றத்தூர் வட்டத்தில் வழுதலம்பேடு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் 24.01.2026 அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News January 9, 2026
காஞ்சிக்கு வந்தது அலெர்ட்!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.10) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்திற்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
News January 9, 2026
காஞ்சியில் காவலர் அணுஅணுவாய் பலி

வாலாஜாபாத் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்வம் (51) கடந்த 3-08-25 அன்று கோவில் பாதுகாப்பு பணிக்காக திம்மராஜம்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.8) உயிரிழந்தார்.


