News April 13, 2025

காஞ்சிபுரத்தில் உதயமாகும் இரு பிர்காக்கள்

image

சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில், வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் புதிதாக இரண்டு பிர்காக்கள் உருவாக்கப்படும் என, தெரிவித்தது. காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணுகாஞ்சி என, இரண்டு பிர்கா உருவாக்க, வருவாய் துறையினர், கருத்துரு அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் பிர்காவை பிரிக்க வருவாய் துறையினர் நீண்ட நாட்களாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 7, 2025

காஞ்சி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE

News December 7, 2025

காஞ்சியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிசம்பர் 8 அனைத்து காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவிகள் நாளை பள்ளிகளுக்கு வர வேண்டாம் டிசம்பர் 9 முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 7, 2025

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்உறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 8 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!