News July 5, 2025

காங்கேயம் அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்

image

சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(40) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News

News December 8, 2025

திருப்பூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்புவது சட்டவிரோதம் என்றும், இதனால் சமூக அமைதி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உண்மைதன்மை உறுதி செய்யாமல் தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. தவறான செய்திகள் பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News December 8, 2025

திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

திருப்பூர், இடுவாயில் 500 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் 5 தலைமுறைகளை கடந்து, குளத்தேரி பகுதியில் இருந்துள்ளார். பின்னர் 1995ஆம் ஆண்டு இடுவாய் மக்கள், சித்தி விநாயகருக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். சக்திவாய்ந்த சித்தி விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடுமாம். இதனால் வெளியூர்களில் இருந்து வந்து பக்தர்கள் விநாயகரை தரிசித்து செல்கின்றனர்.

News December 8, 2025

திருப்பூர்: வாக்காளர்களே! SIR UPDATE

image

திருப்பூர் மக்களே தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

error: Content is protected !!