News August 3, 2024
காங்கேயத்தில் திருப்பூர் கலெக்டர் மலர்தூவி மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி தீரன் சின்னமலையின் 219வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை சமுதாய நலக்கூடத்தில் அவரது உருவப்படத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.
Similar News
News December 10, 2025
திருப்பூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.
News December 10, 2025
திருப்பூரில் மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!

திருப்பூர் தேவாங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்யகல்யாணி(74). இவர் நேற்று ரவுண்டானா பகுதியில் கடைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நித்யகல்யாணி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வடக்கு குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
News December 10, 2025
திருப்பூரில் திருநங்கை கொலை! இருவர் அதிரடி கைது!

திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா. இவருக்கும் அருகில் வசித்து வந்த சுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணியம் தள்ளிவிட்டதில் ஸ்ரேயா தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயா உயிரிழந்தார். இதனால் சுப்பிரமணியன், அவரது மகன் சரவணனை போலீசார் கைது செய்தனர்.


