News January 24, 2025
காங்கிரஸ் கட்சி நிர்வாகி படுகொலை?

காரைக்குடி முத்துப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பாண்டி (45) காங்கிரஸ் கட்சி வார்டு பொறுப்பில் நிர்வாகியாக உள்ளார். இன்று அதலை கண்மாய் பகுதியில் உள்ள அவரது வயக்காட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். அப்பகுதியில் உறவினர்கள் சென்று பார்த்தபோது உடல் முழுவதும் வெட்டுப்பட்டு பாதி உடல் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
சிவகங்கையில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணை மின் நிலையத்தின் 11KV கண்ணமங்கலபட்டி பீடரில் (அக்-30) நாளை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் கண்ணமங்கலபட்டி, குமரிப்பட்டி, சாத்திணிப்பட்டி, பருகுபட்டி, காப்பாரப்பட்டி, நாட்டார்மங்கலம், அரசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
சிவகங்கை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை !

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.
News October 29, 2025
சிவகங்கை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

சிவகங்கையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. மறவாமல் குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


