News April 23, 2025

கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்

image

கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்ததாலும் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்ததாலும் மூலவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். ஒருவர் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் அவருடைய கோரிக்கைகள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Similar News

News November 11, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை, உங்கள் போனிற்கு குறைந்த வட்டியில் லோன் வழங்குவதாக SMS வந்தால், அதில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். இது போலி நிதி மோசடி ஆகும். அவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று பணம் பறிப்பார்கள். மேலும், இதுபோன்ற மோசடிகள் குறித்து உடனடியாக https://www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 எண்ணை அழைக்கலாம்.

News November 11, 2025

கிருஷ்ணகிரி: ஒரு நிமிட அலட்சியம் கூட மரணத்திற்கு காரணமாகலாம்

image

சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது, உங்கள் முழு கவனமும் வாகனம் ஓட்டுவதில் மட்டுமே இருக்கட்டும். கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள், மெசேஜ் அல்லது அழைப்பில் ஈடுபடாதீர்கள். ஒரு நிமிட அலட்சியம் கூட மரணத்திற்கு காரணமாகலாம். பாதுகாப்பே முதன்மை – விதிகளை பின்பற்றி, கவனமாக வாகனம் ஓட்டுங்கள். உங்கள் குடும்பம் உங்களை நம்பி தான் இருக்கிறது, என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News November 10, 2025

கிருஷ்ணகிரி: இரவு காவலர் ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!