News March 27, 2024

கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Similar News

News December 18, 2025

செங்கல்பட்டு: ரயில் இடித்து முதியவர் பரிதாப பலி

image

காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, பரனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

News December 18, 2025

செங்கல்பட்டு: புது மாப்பிளைக்கு நேர்ந்த சோகம்!

image

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக இருந்த , ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் இவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக தனது திருமணப் பத்திரிகையை உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபோது, பொக்லைன் இயந்திரம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூணாம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 18, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!