News November 24, 2024

கழிவு மீன் ஆலையை மூட நாளை போராட்டம்

image

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 3 மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி கிராம மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை இழுத்து மூடவும், ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் கூறி நாளை தூத்துக்குடியில் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Similar News

News November 23, 2025

தூத்துக்குடி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

தூத்துக்குடி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News November 23, 2025

JUST IN: தூத்துக்குடிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்க.

News November 23, 2025

தூத்துக்குடி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!