News April 3, 2024

கழிவு பூக்களில் இருந்து ஊதுபத்தி

image

இந்து அறநிலைத்துறை ஈரோடு சிறகுகள் மற்றும் தனியார் நிறுவனம் சேர்ந்து சென்னிமலை முருகன் கோயிலில் ஸ்கிரீன் டெம்பிள் ப்ராஜெக்ட் என்னும் பெயரில் மக்கும் குப்பைகளை சேகரிக்க நான்கு பெரிய ட்ரம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழங்களை வைத்து குங்குமம் மற்றும் ஊதுபத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 119 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 20, 2025

ஈரோடு அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

ஈரோடு எலவமலையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரசவத்திற்காக, ஜெயம்கொண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே சேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் சேகரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சேகர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

இந்த மாத இறுதிக்குள் வைக்க வலியுறுதல்!

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்களில் வரும் 30-ம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் தளலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!