News December 6, 2024
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 50 பேருக்கு பாதிப்பு!

பல்லாவரம் பகுதியில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து, 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த 2 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News November 7, 2025
செங்கை: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
செங்கல்பட்டு: ரேஷன் கார்டு இருக்கா? நாளை சூப்பர் வாய்ப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரகளுக்கான குடும்ப முகாம் நாளை (நவ.8) நடைபெற உள்ளது. வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக குறைதீர் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூர்-வடப்பட்டினம், மதுராந்தகம்-பூதூர், திருக்கழுக்குன்றம்-வாயலூர், திருப்போரூர்-மேலையூர், வண்டலூர்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், புதிய அட்டை போன்ற சேவைகளை பெறலாம். ஷேர்!
News November 7, 2025
செங்கல்பட்டு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளி) 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு நாளை மறுநாள் 4,982 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.


