News June 27, 2024

கள்ளழகர் கோவிலில் இனி நாள் முழுவதும் அன்னதானம்

image

தமிழகத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நேற்று சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 21, 2025

மதுரை: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

image

திருப்ப­ரங்­குன்­றத்தை சேர்ந்­த­வர் செந்தில் மகன் திருப்­பதி(26). இவர் 17 வயது சிறுமியை கோவில் ஒன்றில் வைத்து பெற்­றோ­ருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்­டார். இதில் சிறுமி இரண்டரை மாத கர்ப்­ப­மானார். மகளிர் ஊர்­நல அலுவலர் பத்­மா இது குறித்து மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்தார். போலீ­சார் போக்சோ சட்­டத்தில் திருப்­பதியை இன்று கைது செய்தனர்.

News November 21, 2025

மதுரை: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

image

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

error: Content is protected !!