News March 23, 2025
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்

கள்ளசாராய வழக்கில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மூவரிடமும் தனி, தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று(மார்.22) ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.
Similar News
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: SIR சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் டிச.11ம் தேதி நிறைவு பெற உள்ளது. கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி சட்டசபை தொகுதிகள் உளுந்தூர்பேட்டை – 04149- 222255, ரிஷிவந்தியம் – 04151- 235400, சங்கராபுரம் – 04151- 235329, கள்ளக்குறிச்சி (தனி)-04151-222449 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: தொடரும் மாடுகளின் உயிரிழப்பு!

மூங்கில்துறைப்பட்டு;பாக்கம் ஏரிப் பகுதியில் மான்களை வேட்டையாட சமூக விரோதிகள் அமைக்கும் சுருக்குக் கம்பிப் பொறிகளில், அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் சிக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. புதூரைச் சேர்ந்த ஒருவரின் மாடு அண்மையில் பொறியில் சிக்கி மீட்கப்பட்டது. இதை செய்பவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் விலங்கு நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


