News March 23, 2025
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்

கள்ளசாராய வழக்கில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மூவரிடமும் தனி, தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று(மார்.22) ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.
Similar News
News December 17, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்காண் தேர்வு குறித்து அறிவிப்பு

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்காண் தேர்வு டிசம்பர் 27,28 ஆகிய தேதிகளில் உளுந்தூர்பேட்டை,கடலூர் திருச்சி,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெற உள்ளதாகவும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பித்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலமாக தேர்வு தொடர்பான விபரம் மற்றும் நுழைவு சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: பைக் திருடிய வாலிபர் கைது!

கல்வராயன் மலையில் உள்ள வில்வத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி (37) இவர் கடந்த டிச.13ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். பின் நள்ளிரவு எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் வேங்கோடு கிராமத்தைச் சேர்ந்த அருள் (19) என்ற வாலிபரை பைக் திருடியதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: இனி வரி செலுத்துவது ஈஸி! CLICK HERE

கள்ளக்குறிச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <


