News April 18, 2025
கள்ளக்குறிச்சி: ரூ. 1 லட்சம் வரை அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் சட்ட முறையாக அமல்படுத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் கட்டாயம் எனவும், இல்லை என்றால் தொழிற்சாலை விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், இந்திலி தனியார், கல்லுாரி மாணவர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சுரேந்திரன் வரவேற்றார்.மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம் வழங்கினர். 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
News January 2, 2026
கள்ளக்குறிச்சி: 12th PASS – ரயில்வேயில் 312 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <
News January 2, 2026
பொங்கலுக்கு தயரான நெற்பயிர்கள்!

சின்னசேலம் வட்டாரத்துக்குட்பட்ட பகுதியில் கோமுகி அணை, ஏரி பாசனம், கிணற்றுப் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். மேலும் தற்போது புது நெல்லை அறுவடை செய்து பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலான வயல்களில் தயார் நிலையில் நெல் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


