News August 2, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மீது ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: இலவச டுரோன் ஆப்பரேட்டர் பயிற்சி

சென்னை, கிண்டியில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இலவச டுரோன் ஓட்டும் பயிற்சியை வழங்குகிறது. இதில் பயில இலவச ஹாஸ்டல் வசதிகளும் உண்டு. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர <
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே உள்ள கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி சுகுணா(35). இந்நிலையில், சம்பவத்தன்று சுகுணா, விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் , கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கள்ளச்சந்தையில் மது விற்ற நபர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்வதாக இன்று (நவ.7) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் நேரடியாக சென்று விசாரணை செய்த போது, 35 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றியதுடன், அரிகிருஷ்ணனை கைது செய்யப்பட்டார்.


