News August 2, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மீது ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலமங்கலம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்தை இன்று (15.12.2025) நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இந்த நிகழ்வின் போது பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
News December 15, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், இன்று பெண் ஒருவர் தனது மகன், மருமகளுடன் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், கந்து வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், முழு தொகையையும் திருப்பி அளித்தும் மேலும் பணம் கேட்டு ஒருவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: EB பில் நினைத்து கவலையா??

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <


