News August 2, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மீது ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

கள்ளக்குறிச்சி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டிலிருந்து சென்றவர் சலடலாமா மீட்பு!

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அ.பாக்கியராஜ்(39), ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த டிச.8 வீட்டை விட்டு வெளியே சென்று திரும்ப வராததால், பாக்கியராஜின் மனைவி தீபா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாக்கியராஜ் குளத்தில் இருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். பின், தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: சொந்த நிலத்தை அளந்தவருக்கு கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், சத்தியமூர்த்தி இருவருக்கும் கொசப்பாடி அருகருகே நிலம் உள்ளது. ராஜேந்திரனுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில், 10 சென்ட் நிலம் சத்தியமூர்த்தி அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் தன் நிலத்தை அளந்த போது, சத்தியமூர்த்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் சத்தியமூர்த்தி மீது நேற்று (டிச.12) போலீசார் வழக்குபதிந்தனர்.


