News February 27, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தனிநபர்கள் இடையூறு செய்வதாக புகார் பெறப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

கள்ளக்குறிச்சியில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலனி தயாரிப்பு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை(ஏப்.22) காலை 10 மணி அளவில் சென்ட்ரல் புட்வேர் ட்ரைனிங் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <