News March 21, 2024
கள்ளக்குறிச்சி: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சமுத்து பச்சையம்மாள் என்பவரது வீடு மின்கசிவினால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உடன் இருந்தார்.
Similar News
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
கள்ளக்குறிச்சியில் கிடு கிடுவென உயர்ந்த விலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாகவே தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: அப்பா என கூப்பிடாததால் கடித்து வைத்த நபர்!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே, கணவரை பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் பெண்ணுக்கு திருச்சியை சேர்ந்த ஆனந்த் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2வது குழந்தையிடம், தன்னை அப்பா என்று அழைக்குமாறு கூறியதற்கு, குழந்தை மறுத்த நிலையில், பல்வேறு இடங்களில் கடித்து வைத்துள்ளார். இதனால் குழந்தை சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


