News March 21, 2024

கள்ளக்குறிச்சி: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சமுத்து பச்சையம்மாள் என்பவரது வீடு மின்கசிவினால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உடன் இருந்தார்.

Similar News

News January 9, 2026

கள்ளக்குறிச்சி: மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் நவீன்குமார் (27). இவருடைய மனைவி ரோஷினி (20). இவர்களுக்கு ரெக்சன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரோஷினி, நவீனுடனான கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நவீன் சென்று அழைத்தபோது ரோஷினி மறுத்ததால், மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

மாவட்ட ஆட்சியருக்கு நாள்காட்டி வழங்கிய செயல் அலுவலர்

image

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில்
1300க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் வீடுகளுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கப்பட்டது. இன்று (ஜன.8) ஆட்சியரை நேரில் சந்தித்து ஊராட்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குகாலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரா. பரமசிவம் ஊராட்சி மன்ற செயல் அலுவலர் ஆவார்.

News January 9, 2026

பொங்கல் கலை விழா குறித்து ஆலோசனை கூட்டம்!

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் பொங்கல் கலை விழா நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!