News March 18, 2025
கள்ளக்குறிச்சி: தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2024- 25 ஆம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு முடிக்கும் பணிகள் அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமைகள் தோறும் நடைபெறும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் மார்ச் 20-ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 27-ஆம் தேதி என்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 20, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒருங்கிணைந்த மரக்கன்றுகள், நாற்றங்கால் பண்ணை அமைத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
News March 20, 2025
கள்ளக்குறிச்சியில் அரசு வேலை ரூ.60,000 வரை சம்பளம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துத்துறையின் கீழ், கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 40வயது வரை. மார்ச்.25ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க