News March 15, 2025

கள்ளக்குறிச்சி: திருமணத் தடை நீக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 16, 2025

மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு

image

அரகண்டநல்லூர், கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்,15 பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(மார்ச் 15) இரவு வெங்கடேசன் தனது வீட்டில் ஜங்ஷன் பாக்சை பிரித்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே வெங்கடேசனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News March 16, 2025

தூய்மை பணியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க மா.செ

image

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நகர இளைஞரணி சேர்ந்த மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை‌ அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு மதிய உணவு வழங்கிய தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் இந்த தமிழக வெற்றி கழகத்தைச் கவரை தெரு வார்டு எண் 18 தமிழக வெற்றி கழக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News March 15, 2025

குத்துவிளக்கு ஏற்றி மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கல்லூரியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களின் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்து அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!