News August 14, 2024
கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக சக்தி என்பவர் இன்று பொறுப்பேற்று கொண்டார். தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி என்பவருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Similar News
News November 19, 2025
கள்ளக்குறிச்சி:பெற்ற மகளை சீரழித்த தந்தை கைது!

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டிற்கு திருமலை, என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். (நவ.10) தேதி வழக்கம் போல் வீட்டிற்கு சென்ற திருமலை,சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு சிறுமியின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர்.
News November 19, 2025
கள்ளக்குறிச்சி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
நகைக்கடையை உடைத்து திருட முயற்சி

சின்னசேலத்தைச் சேர்ந்த சீனிவாசன் கடந்த ஒன்றரை வருடங்களாக சின்னசேலம் சேலம் மெயின் ரோடு பகுதியில் நகை கடையை நடத்தி வருகின்றனர். இன்று (நவ.18) அதிகாலை இரண்டு மர்மநபர்கள் மாடிபடி வழியாக வந்து ஷட்டரை கட்டிங் மிஷின் வைத்து கட்டிங் செய்து பொருட்களை திருட முயற்சித்துள்ளதாக சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


