News August 25, 2024
கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள், குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த தெரிவித்துள்ளார். ஏரி, குளங்களில் இருந்து மண் எடுப்பதை சிலா் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, ஏரிகளில் மண் வெட்டி எடுக்கப்பட்ட அளவு மீறாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அளவுகளுக்கு மீண்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
Similar News
News November 28, 2025
கள்ளக்குறிச்சிக்கு ஆரஞ்சு அலர்ட் – தொலைபேசி எண்கள் வெளியீடு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை (நவ.28) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி எண்கள் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, கட்டணமில்லா தொலைபேசி எண் 04151-228801, 9445005243, கள்ளக்குறிச்சி- 04151-222449, சின்னசேலம் -04151-257400, சங்கராபுரம் – 04151-235329, வாணாபுரம் 04151-235400 ஆகிய எண்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: காவல்நிலையம் முன்பு திரண்ட கிராமம்!

கள்ளக்குறிச்சி: மேல்சிறுவள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று (நவ.27) மாலை மூங்கில்துறைப்பட்டு இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதையறிந்த மூங்கில்துறைப்பட்டு காவலர்கள், இருதரப்பு இளைஞர்களையும் அழைத்து வந்து பேசிக்கொண்டிருக்கையில், மூங்கில்துறைப்பட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காவல்நிலையத்திற்கு வந்தனர். மேல்சிறுவள்ளூர் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவலர்கள் தெரிவித்த பின்னர் கலைந்தனர்.
News November 27, 2025
சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்பு தீவிர திருத்தம் பணியை நேரில் ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கணக்கீட்டு படிவங்களை சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ 27)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


