News June 26, 2024

கள்ளக்குறிச்சி: உயிரிழப்பு 61 ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: பால் பண்ணை அமைக்க ரூ.1.67 லட்சம்!

image

1) கள்ளக்குறிச்சி மக்களே., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் ரூ.1.67 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. 2) பால் பண்ணை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும். 3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு. 4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: போலீசாருக்கே மிரட்டல் விடுத்த 5 பேர்!

image

கள்ளக்குறிச்சி: செட்டித்தாங்கலில் நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்திருந்தனர். அப்போது, கருமகாரிய கொட்டகை அருகே அமர்ந்து சூதாடிய 6 பேர் போலீசாரை பார்த்து தெறித்து ஓடினர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த நிலையில், அவர்கள் போலீசாரையே மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.70,340 பணம் மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: சாப்பிட சென்றவர் மயங்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி: அகரக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து (51) கூலி வேலை செய்து வருகிறார். நேற்று அவர் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, ஹோட்டல் வாசலிலேயே திடீரெனெ மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பச்சமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!