News September 15, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.17,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, INFLUX நிறுவனத்தின் மூலம் ஒரகடம் & ஸ்ரீபெரும்புதூர்-ல் Production/Quality/Assembly பணிக்கு 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, டிப்ளமோ (அ) டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.16,500-ரூ.17,000 வரை வழங்கப்படும். 18-24 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உணவு & போக்குவரத்து வசதி இலவசம். டிச.15-க்குள் இந்த <
News November 26, 2025
கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜவ்வாது உசேன் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராபின்சன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜவ்வாதுஉசேன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளராக ஜவ்வாது உசேன் இன்று (நவ.26) பொறுப்பேற்று கொண்டார்.
News November 26, 2025
ஆட்சியரகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 76 ஆவது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று (நவ.26) அரசு அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியினை ஏற்று கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


