News September 15, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

கள்ளக்குறிச்சி: போதைப் பொருட்கள் விற்றவர் கைது!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த வரதப்பனுார் கிராமத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று (அக்.31) போலீசார் அந்த கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது பெட்டிக் கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

News November 1, 2025

உளுந்தூர்பேட்டை: பள்ளத்தில் பாய்ந்த இருசக்கர வாகனம்!

image

உளுந்தூர்பேட்டை அருகே பரிந்தல் கிராமத்தில் திருக்கோவிலூர்-ஆசனூர் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தாலும், எந்தவித எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், நேற்று இரவு அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் அங்கிருந்த 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 1, 2025

கள்ளக்குறிச்சி:பித்ருக்கள் தோஷம் நீக்கும் வீரசோழபுரம் சிவன்

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!