News August 17, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 26, 2025

கள்ளக்குறிச்சி விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சியில் நவம்பர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கால்நடைகள் பராமரிப்பு துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: கரும்புத் தோப்பில் சேலையுடன் கிடந்த மண்டை ஓடு!

image

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ராஜ், நேற்று (நவ.26) கரும்பு வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கரும்பு தோட்டத்தின் நடுவே எலும்பு துண்டுகளுடன் மண்டை ஓடு மற்றும் புடவை கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வி.ஏ.ஓ., சரவணனுக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசாரும் வந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!