News August 17, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா?

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், மையனூர், சீர்ப்பனந்தல், எடுத்தனூர், ஜம்படை, வாணாபுரம், பகண்டை கூட்டு ரோடு, ஏந்தல், பொற்பாலம்பட்டு, மணியந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி – மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
வடக்கநந்தல் பகுதியில் வாக்கு திருத்தம் பணியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார், அப்போது சின்னசேலம் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்போது கலெக்டர் பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும் சரியான வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
News November 16, 2025
கள்ளக்குறிச்சி: பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் ரெட்டி நவம்பர் 16-ஆம் தேதி என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைக்காலம் வரும் முன் இந்த பணிகளை முடிவையும் அறிவுறுத்தினார்.


