News October 23, 2024
கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை,36; விவசாயி. பிச்சப்பிள்ளையும், அவரது மனைவி தையல்நாயகியும் நேற்று மாலை நிலத்திற்கு சென்றனர். ஈயனுார் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், வரப்பில் நடந்து சென்ற பிச்சப்பிள்ளை மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க 1.UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF, 2. AIS-வருமானவரித்துறை சேவை, 3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள், 4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை, 5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை, 6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: புதியதாக இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 போலீஸ் ஸ்டேஷன்களில் 5 ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஜவ்வாது உசேன், ரிஷிவந்தியத்தில் ரவிச்சந்திரன், வடபொன்பரப்பியில் விவேகானந்த், எலவனாசூர்கோட்டையில் ஆனந்தன், கீழ்குப்பத்தில் அமலா பொறுப்பேற்றனர். கரியாலூர், மணலூர்பேட்டை, வரஞ்சரம் ஸ்டேஷன்களுக்கு இன்னும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை.


