News October 23, 2024
கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை,36; விவசாயி. பிச்சப்பிள்ளையும், அவரது மனைவி தையல்நாயகியும் நேற்று மாலை நிலத்திற்கு சென்றனர். ஈயனுார் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், வரப்பில் நடந்து சென்ற பிச்சப்பிள்ளை மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: தங்கை குழந்தையை பார்க்க வந்தவர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: வடகுறும்பூரைச் சேர்ந்த கண்மணி ராஜா சென்னையில் உள்ள தனியார் பைக் ஷோரூம் இல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது தங்கைக்குப் பிறந்த குழந்தையை பார்க்க நேற்று (டிச.2) சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர், தனக்கு திருமணமாக காலதாமதம் ஆகிறது என மனவேதனையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News December 2, 2025
தியாகதுருகம் : தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் இன்று டிச( 2 ) தீயணைப்பு நிலையம் அருகில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திரளான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை விளக்கி இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் இதில் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <


