News December 5, 2024
கள்ளக்குறிச்சியில் 410 வீடுகள் சேதம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் புயல் மழையால் 410 வீடுகள் சேதமாகி உள்ளது. அவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை 2000 ரூபாய் சம்பந்தப்பட்ட துறை சார்பாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: தங்கை குழந்தையை பார்க்க வந்தவர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: வடகுறும்பூரைச் சேர்ந்த கண்மணி ராஜா சென்னையில் உள்ள தனியார் பைக் ஷோரூம் இல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது தங்கைக்குப் பிறந்த குழந்தையை பார்க்க நேற்று (டிச.2) சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர், தனக்கு திருமணமாக காலதாமதம் ஆகிறது என மனவேதனையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News December 2, 2025
தியாகதுருகம் : தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் இன்று டிச( 2 ) தீயணைப்பு நிலையம் அருகில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திரளான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை விளக்கி இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் இதில் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <


