News April 22, 2025
கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 25ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 9, 2025
கள்ளக்குறிச்சியில் ஓர் அரிய வாய்ப்பு!

கள்ளக்குறிச்சி மக்களே.., தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(நவ.10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி பெறுவோருக்கு ரூ.9,000 ரூ.12,000 வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படுமென மாவட்ட கலெக்டர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: பெற்றோர் கண்டித்ததால்-மாணவன் விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி: கனகனந்தலை சேர்ந்த கோகுல்நாத் திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், இதை தெரிந்த பெண்ணின் பெற்றோர் கோகுல்நாத்தை கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த கோகுல்நாத், நேற்று (நவ.8) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


