News April 4, 2025
கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி பலி

கள்ளக்குறிச்சி, நேற்று காலை திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனூரில் பலத்த மழை பெய்தது. காலை 8:00 மணியளவில் ராதா என்பவரின் வீட்டு தோட்டத்தில் மின்னல் தாக்கியதில்அங்கிருந்த பசுமாடு மற்றும் அதன் கன்று குட்டியும் சுருண்டு விழுந்து இறந்தது. மின்னல் தாக்கி பசு மாடு, கன்று பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

முதலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா தன்னுடைய இருசக்கர வாகனத்தை நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மீண்டும் இன்று காலை எழுந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இரு சக்கர வாகனம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக ஜெயசூர்யா திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கள்ளக்குறிச்சி, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: போதை பொருள் விற்பு.. போலீசார் பிடிப்பு!

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் சப்இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் மணிமாறன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


