News April 3, 2025

கள்ளக்குறிச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம், அரும்பாக்கம், தாழனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

Similar News

News August 11, 2025

குதிரைசந்தல் அருகே கார் மோதி விபத்து

image

கச்சிராயபாளையம் செல்லும் வழியில், குதிரைசந்தல் பேருந்து நிறுத்தம் அருகே, எலியத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஓட்டிச்சென்ற பைக் மீது, எதிரே வந்த மாத்தூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் கார் மோதியது. இதில் கார்த்திகேயனின் காலில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் சுரேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 10, 2025

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) இரவு 10 மணி முதல், நாளை திங்கள் கிழமை (11.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 10, 2025

கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள தனித்துவமான கோயில்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இங்குள்ள மூலவரான அர்த்தநாரீஸ்வரர், பாதி சிவன் மற்றும் பாதி பார்வதி என ஒரே சிலையில் காட்சியளிக்கிறார். சிவனின் வலதுபுறமும், பார்வதியின் இடதுபுறமும் ஒரே சிலையில் அமைந்திருப்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு தனித்துவமான அம்சமாகும். இங்கு வழிபட்டால் மகிழ்ச்சியும், திருமணத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!

error: Content is protected !!