News April 12, 2025

கள்ளக்குறிச்சியில் அரசு மானியத்தில் திட்டங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 – 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

Similar News

News November 28, 2025

கள்ளக்குறிச்சி: காவல்நிலையம் முன்பு திரண்ட கிராமம்!

image

கள்ளக்குறிச்சி: மேல்சிறுவள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று (நவ.27) மாலை மூங்கில்துறைப்பட்டு இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதையறிந்த மூங்கில்துறைப்பட்டு காவலர்கள், இருதரப்பு இளைஞர்களையும் அழைத்து வந்து பேசிக்கொண்டிருக்கையில், மூங்கில்துறைப்பட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காவல்நிலையத்திற்கு வந்தனர். மேல்சிறுவள்ளூர் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவலர்கள் தெரிவித்த பின்னர் கலைந்தனர்.

News November 27, 2025

சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்பு தீவிர திருத்தம் பணியை நேரில் ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கணக்கீட்டு படிவங்களை சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ 27)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 27, 2025

சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம்,79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம்(SIR) பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.இதில் கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

error: Content is protected !!