News April 29, 2025
கள்ளக்காதல் ஜோடி சடலமாக மீட்பு

கலசப்பாக்கத்தை சேர்ந்த முருகனுக்கு(43) மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த கீதாவுக்கு(38) கணவர், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முருகனுக்கும், கீதாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் திடீரென கடந்த பிப்.08ஆம் தேதி மாயமான நிலையில், நார்த்தாம்பூண்டி பழங்கோயில் ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 29, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் கைப்பேசி எண்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஏப்ரல்.29) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News April 29, 2025
தி.மலை கோயிலில் திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (ஏப்.29) இன்று பிரபல திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.