News April 15, 2025

கள்ளக்காதலியை எரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுனரும் உயிரிழப்பு

image

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நுாரிஷாவுக்கும்(42) திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான டில்லிபாபுக்கும்(47) தகாத உறவு இருந்துள்ளது. இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் டில்லிபாபு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன், நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இதில் கடந்த 11ம் தேதி நுாரிஷா உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டில்லிபாபுவும் பலியானார்.

Similar News

News September 18, 2025

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர், பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

News September 18, 2025

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்; திருவள்ளூர் எம்.பி பதிவு

image

திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இரட்டைமலை சீனிவாசன், ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக தனி அமைப்பை நிறுவி தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு, நில உரிமை, கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவற்றுக்காக போராடியவர். தமிழக மக்களால் தாத்தா என அன்போடு அழைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் பற்றி தனது பதிவு மூலம் நினைவுகூர்ந்தார்.

News September 18, 2025

திருவள்ளூர்: வேலை தேடுபவர்களுக்கு குட்நீயூஸ்

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!