News March 25, 2025
கல் குவாரியில் மூழ்கிய வாலிபர்; 2வது நாளாக தேடும் பணி

சிவகங்கையை சேர்ந்தவர் பாலமுருகன் (28). இவர் குன்றத்துாரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பாலமுருகன் தன் நண்பர்களுடன் எருமையூரில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கி மாயமானார். சோமங்கலம் போலீசார் மற்றும் படப்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. 3வது நாளாக இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News December 23, 2025
செங்கல்பட்டு வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகின்ற 2026 வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும் நீக்கவும் திருத்தவும் மேற்கொண்ட மாறுதல்கள் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதன்படி பின் வரும் நாட்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. 27. 12. 2025 சனிக்கிழமை 28 .12. 2025 ஞாயிற்றுக்கிழமை, 03 .01. 2026 சனிக்கிழமை 04 .01 .2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. ஷேர் IT
News December 23, 2025
JUST IN: செங்கல்பட்டு அருகே செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று காலை போராட்டத்திற்கு வந்த செவிலியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தூக்கிவிட்டு மீண்டும் போராட்டம் நடத்த வந்தனர்.ஆரம்பர சுகாதார மையத்தில் போரட்டத்தை துவங்கி வந்த போது தடுத்து குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்
News December 23, 2025
செங்கல்பட்டு இன்று இரவு பணி மேற்கொள்ளும் காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


