News May 16, 2024
கல்வி நிறுவனங்கள் வாகனங்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

காரைக்காலில் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் வரும் ஜூன் 1,2 தேதிகளில் போக்குவரத்து துறை வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் அளித்து வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். இந்த வாகனங்கள் மட்டுமே மாணவர்களுடன் பயணிக்க சாலையில் அனுமதிக்கப்படும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்
Similar News
News November 22, 2025
காரைக்காலில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தங்களது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் (22.11.25), (23.11.25) ஆகிய தேதிகளில் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள் தங்களது BLO-வை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடிகளில் சந்தித்து சேவைகளை பெறலாம் என தேர்தல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
புதுச்சேரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வருகிற நவ.24ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் எவரேனும் அக்கடல் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருபந்தால், அவர்களை நாளை 23.11.2025 தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
புதுவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுவை, ரெட்டியார்பாளையம் சேர்ந்த தம்பதியினர் ததேயூ ராஜ் – உஷா. இவர்களது மூத்த மகள் லியோனாமரி தெரேஸ் என்பவர் சில ஆண்டுகளாக ரத்த சோகையால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றார். மேலும் அவர் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலால் லியோனாமரி தெரேஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


