News October 23, 2024

கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். மேலும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விரைவாக அனைத்து பணிகளையும் முடிக்கவும் உத்தரவிட்டார்.

Similar News

News December 10, 2025

திருப்பூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.

News December 10, 2025

திருப்பூரில் மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!

image

திருப்பூர் தேவாங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்யகல்யாணி(74). இவர் நேற்று ரவுண்டானா பகுதியில் கடைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நித்யகல்யாணி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வடக்கு குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

News December 10, 2025

திருப்பூரில் திருநங்கை கொலை! இருவர் அதிரடி கைது!

image

திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா. இவருக்கும் அருகில் வசித்து வந்த சுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது‌. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணியம் தள்ளிவிட்டதில் ஸ்ரேயா தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயா உயிரிழந்தார். இதனால் சுப்பிரமணியன், அவரது மகன் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!