News October 23, 2024

கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். மேலும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விரைவாக அனைத்து பணிகளையும் முடிக்கவும் உத்தரவிட்டார்.

Similar News

News December 10, 2025

திருப்பூரில் கொலை! அதிரடி உத்தரவு

image

திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டியனிடம் பீடி கேட்டு ஏற்பட்ட தகராறில் கடந்த ஜூலை மாதம், 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் அவரை கொலை செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இளம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2 ஆண்டுகள் இருவரையும் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News December 9, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேர கொள்ளை சம்பவங்களை தடுத்திடும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் மாநகர காவல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 9, 2025

தாராபுரத்தில் சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

image

தாராபுரம் அருகே உள்ள ராமபட்டினத்தைச் சேர்ந்த செல்லதுரை என்ற கூலித் தொழிலாளியின் மகள் தாரணி. இவர் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!