News August 7, 2024
கல்விக் கடன் விழிப்புணர்வு கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்காக கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் நடக்கும்
கல்விக்கடன் முகாம் தொடர்பாக கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந்த், தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகேயன், கடன் ஆலோசகர் வணங்காமுடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
திருப்பூர்: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோர் பெருமாநல்லூர் அருகே தட்டாங்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். ஹோட்டல் வேலை செய்யும் சக்திவேல், மனைவி லட்சுமி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நேற்று கத்தியால் குத்தினார். பிறகு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
சிவ பக்தர்களுக்கு நற்செய்தி

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபத் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் செவ்வாய்க்கிழமை கூடுதலாக 5 பேருந்துகளும் புதன்கிழமை 25 வியாழக்கிழமை 25 வெள்ளிக்கிழமை 10 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
News December 1, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .


