News March 16, 2025
கல்வராயன்மலையில் 4700 கிலோ வெள்ளம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வாரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக அருள், ராமசாமி ஆகிய இருவரும் 4700 கிலோ வெள்ளம் பதுக்கி வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் வாரம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4700 வெள்ளம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
Similar News
News March 18, 2025
குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார்( 9). அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர், அவரது நண்பருடன், அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென நீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார். ரிஷிவந்தியம் போலீஸ் விசாரிக்கின்றனர்.
News March 17, 2025
இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க அரசுத்துறை அலுவலர்களுடன் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.