News January 23, 2025

கல்லூரி மாணவி கொலை வழக்கு – ஆஜர்படுத்த உத்தரவு

image

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலை மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சதீஷை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கில், புழல் சிறையில் இருந்து அவரை வரும் 29ஆம் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Similar News

News November 19, 2025

சென்னையில் இரண்டு நாள் அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் வரும் 25,26 தேதிகளில் காலை 10 முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், முன்பதிவு கட்டாயம். www.editn.in அல்லது 9360221280/9840114680 விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

விக்டோரியா ஹால் நவ-20 ஆம் தேதி திறப்பு!

image

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியே 62 லட்சம் செலவில் விக்டோரியா பப்ளிக் ஹால் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தரைத்தளத்தில் 600 பேரும், இடைத்தளத்தில் 600 பேரும், பால்கனியில் 200 பேரும் என மொத்தம் 1400 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்ட விக்டோரியா பப்ளிக் ஹாலை வரும் 20-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

News November 18, 2025

தேர்தல் ஆணையம் மீது திமுக எம்.பி குற்றச்சாட்டு

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், `திமுக எடுத்து வைத்துள்ள கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கணக்கிட்டு படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்பதில் மக்கள் பெரும் குழப்பம் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் படிவம் பூர்த்தி செய்த உதவி வருகிறார்கள்` என்றார்

error: Content is protected !!