News January 23, 2025

கல்லூரி மாணவி கொலை வழக்கு – ஆஜர்படுத்த உத்தரவு

image

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலை மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சதீஷை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கில், புழல் சிறையில் இருந்து அவரை வரும் 29ஆம் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Similar News

News November 14, 2025

சென்னை: டிகிரி/ டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

image

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் Sales Consultant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி/ டிப்ளமோ முடித்த 22- 30 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.20,000 – ரூ.25,000 வழங்கப்படும். இந்த பணிக்கு 1-3 வருடம் அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. சென்னையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

News November 14, 2025

சென்னை: நிதி மோசடி வழக்கில் சிறையில் அடைக்க உத்தரவு

image

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதனை நவ.24 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.100 கோடி டெபாசிட் நிபந்தனையை நிறைவேற்றாததால் தேவநாதனை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இடைக்கால ஜாமின் நீட்டிப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தேவநாதன் சரண் அடைந்தார். இதை தொடர்ந்து அவரை நவ.24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

News November 14, 2025

சென்னை: முதல் கணவர் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை

image

சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், முதல் கணவரை பிரிந்து 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் முதல் கணவருக்கு பிறந்த 2 மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரிந்து சென்ற தங்களது தந்தையிடம் கூறினர். உடனே அவர், மகள்களுடன் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மற்றும் அவரது 2வது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!