News January 23, 2025
கல்லூரி மாணவி கொலை வழக்கு – ஆஜர்படுத்த உத்தரவு

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலை மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சதீஷை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கில், புழல் சிறையில் இருந்து அவரை வரும் 29ஆம் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஜாக்டோ ஜியோ நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
News November 17, 2025
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஜாக்டோ ஜியோ நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
News November 17, 2025
சென்னையின் நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

சென்னை மேற்கு, தெற்குப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 5வது சுற்றுவட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம், தொலைதூர மற்றும் சரக்கு வாகனங்களை நகருக்கு வெளியே திசை திருப்பும். அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் வெளிவட்டச் சாலை வரை புதிய இணைப்புகள் உருவாக்கப்பட்டு, பரந்தூர் விமான நிலையப் போக்குவரத்து எளிதாக்கப்படும்.


