News November 23, 2024
கல்லூரி மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

நாகையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (வயது 24) என்ற வாலிபர் காதலித்து இரு முறை கர்ப்பமாக்கி உள்ளார். இதையடுத்து மாணவி திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் ஜான்சன் மறுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் நாகை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்கு பதிவு செய்து ஜான்சனை கைது செய்து விசாரணை நடத்தினார்.
Similar News
News December 5, 2025
நாகை: இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்த அறிவிப்பு

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு, டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருந்த சுபம் கப்பல் சேவை, காலநிலை மாற்றங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட புயல் பாதிப்பால், காங்கேசன் துறைமுகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல் சேவை தொடங்கும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சுபம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News December 5, 2025
நாகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

நாகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News December 5, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


