News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த விராலிமலையே சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

Similar News

News November 19, 2025

புதுகை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

image

புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள திருவானைக்காவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பாப்பா (74), என்ற மூதாட்டி லேனா விளக்கு பகுதியில் உள்ள அவரது வயலில் மின்மோட்டார் இயக்கும்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூதாட்டியின் உடல் திருமயம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

News November 19, 2025

புதுகை: மாநகர மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

SIR சிறப்பு வாக்காளர் திருத்த படிவத்தினை, பூர்த்தி செய்திருந்தாலும், பூர்த்தி செய்யப்படாமல் இருந்தாலும் SIR படிவத்தை (19.11.2025) முதல் (23.11.2025) வரை மதியம் 2 மணி முதல், மாலை 5:45மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம் அந்த அந்த (வாக்குச்சாவடி நிலையங்களில்) நேரடியாக சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

புதுகையில் SIR பணிகளை ஆய்வு செய்த மேயர்

image

புதுக்கோட்டை வடக்கு மாநகர திமுக சார்பில், நடைபெற்று வரும் SIR தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகளை, மாநகராட்சி துணை மேயர் லியாகத்அலி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிழ்வில் மாவட்ட மாநகரத் திமுக செயலாளர்கள் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் பாக முகவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!