News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

Similar News

News November 16, 2025

திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

image

மணிகண்டம் அருகே நாகமங்கலத்தை சேர்ந்த லாரன்ஸ் மகன் ரோஷன் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ரோஷன் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோஷன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 16, 2025

திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வில் 576 பேர் ஆப்சென்ட்

image

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1, 14 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3951 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3375 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 576 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2, 51 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 15,286 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

News November 16, 2025

திருச்சி: நண்பனை கொலை செய்த இருவர் கைது

image

மணப்பாறை அருகே கருணாநிதி என்பவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், எஸ்பி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இறந்தவரின் நண்பர்களான சூரகாலப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், கோட்டை கீழையூரை சேர்ந்த பூபதி ஆகியோர் முன்விரோதம் காரணமாக கருணாநிதியை கொலை செய்து பாலத்திற்கு அடியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று கொலையாளிகளை இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!