News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

Similar News

News November 21, 2025

திருச்சி: இலவச ஆங்கில மொழி பயிற்சி

image

தாட்கோ மூலம் 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431- 2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

திருச்சி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 21, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, SIR படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் நவ.22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!