News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

Similar News

News November 24, 2025

காலி பாட்டிலுக்கு ரூ.10: திருச்சியில் புதிய திட்டம் அமல்

image

திருச்சி மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் வரும் நவ.25-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இதற்கு டாஸ்மாக் மது பாட்டில்ககளை வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, காலி மதுபாட்டில்களை மீண்டும் அதே மதுபானக் கடையில் ஒப்படைத்தால், வாடிக்கையாளருக்கு ரூ.10 மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

திருச்சி: மின் நிறுத்தம் வாபஸ் – கனமழை எதிரொலி

image

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தியாகேசர் ஆலை, விடத்திலாம்பட்டி, பன்னாங்கொம்பு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட 81 கிராமங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மழைகாரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்படாது என மறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News November 24, 2025

BREAKING: திருச்சி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!