News February 16, 2025

கல்லால் அடித்து பெண் கொலை கணவா் கைது

image

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் இவரது மனைவி உமா மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 21, 2025

விழுப்புரம்: பெண்ணை ஏமாற்றி லாரி கடத்தல்!

image

விழுப்புரம்: உப்பு வேலூரைச் சேர்ந்த மீனா (38) தனக்கு சொந்தமான லாரியை விற்க முயன்றுள்ளார். இதையறிந்த சேலத்தை சேர்ந்த முருகானந்தன் (44) என்பவர், மீனாவிடம் சென்று லாரியை விற்பனை செய்து தருகிறேன் எனக் கூறி எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் எந்த அவர் கூறியபடி பணத்தை தராத நிலையில், லாரியை கடத்திச் சென்றது மீனாவிற்கு தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 21, 2025

விழுப்புரம்: சேலையில் தீ பற்றி இளம்பெண் பலி!

image

விழுப்புரம்: கழிக்குப்பத்தைச் சேர்ந்த சுசீலா, தனது மகன் சுமன், மகள் அனுசுயா (26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுசீலா மற்றும் சுமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனுசுயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வாசலில் வைத்திருந்த விளக்கில் இருந்து அனுசுயா சேலையில் தீ பற்றியதில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News December 21, 2025

விழுப்புரத்தில் பைக் – பஸ் மோதி கோர விபத்து!

image

விழுப்புரம்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நிலை தடுமாறி பேருந்து மீது மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!