News March 28, 2025
கல்யாண பாக்கியம் தரும் பேளூர் கோயில்!

சேலம்: பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்),இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கல்யாண விநாயகருக்கு மாலை,தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும். மனமுருக வேண்டினால் கல்யாணம், குழந்தை பாக்கியம் கிட்டும்.
Similar News
News September 16, 2025
சேலம் தட்டு வடை செட்டை விரும்பி சாப்பிட்ட உதயநிதி!

கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, பெண்கள் தயாரித்த சேலத்தின் புகழ்பெற்ற தட்டு வடை செட்டை ஆர்வத்துடன் ருசி பார்த்தார். மேலும், மூலிகை தேநீரையும் பருகினார்.
News September 16, 2025
சேலம்: நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

சேலம் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள ▶️புத்தூர் அக்ரஹாரம் வள்ளலார் மண்டபம் சின்ன புத்தூர் ▶️ இடங்கள சாலை இடங்கள சாலை திருமண மண்டபம் ▶️கன்னங்குறிச்சி கே ஏ டி திருமண மண்டபம் கன்னங்குறிச்சி ▶️அயோத்தியாபட்டணம் பருத்திக்காடு ஐ சி எம் சி வளாகம்
▶️ஆத்தூர் சந்தோஷ் திருமண மண்டபம் மோட்டூர் ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெள்ளாளப்பட்டி
News September 16, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகராட்சியில் இன்று (செப்டம்பர் 16) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.