News January 2, 2025
கல்பாக்கம் கடலில் குளித்த பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவரின் மகன்கள் நிதிஷ் (15), திவாஸ் (14), நேற்று (ஜன.1) புத்தாண்டை கொண்டாட, கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். நேற்று மாலை, கல்பாக்கம் நகரியம் பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார பகுதி கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
1. தாம்பரம் – ஜெயகோபால் கரோடியா பள்ளி
2. திருப்போரூர் – எப்.பி.சி திருமண மண்டபம்
3. பரங்கி மலை – டபேலா ஹால்
4. காட்டாங்குளத்தூர் – எஸ்.எச்.ஜி கட்டடம்
5. சித்தாமூர் – தாத்தா ரெட்டைமலை சீனிவாச திருமண மண்டபம்
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்
News September 18, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை தாம்பரம் மாநகராட்சி, திருப்போரூர், புனித தோமையார் மலை நகர்புற பஞ்சாயத்து, சித்தாமூர் மதுராந்தகம் காட்டாங்குளத்தூர் டு திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்-18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப குறை மற்றும் கோரிக்கை கொடுக்கலாம். அதிகாரிகள் விரைந்து செயல்படுவார்கள்.
News September 18, 2025
கிளாம்பாக்கம்: 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்.19 அன்று 355 சிறப்புப் பேருந்துகளும், செப்.20 அன்று 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.