News December 31, 2024
கலைத் திருவிழாவின் மாநில அளவிலான போட்டி அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நடைபெறும் பள்ளி மற்றும் நேரம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலப் போட்டிக்கு தேர்வான அனைவரும் இதில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 6, 2025
திருவாரூர்: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
தலைநகராக விளங்கிய திருவாரூர்!

தமிழக வரலாற்றில் திருவாரூர் மாவட்டம் மிக முக்கிய பகுதியாகும். இது முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் ( ஆரூர், ஆவூர், வல்லம், குடவாயில், அழுந்தூர்) ஒன்றாகவும், அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் ஐந்து இடங்களில் (ஆரூர், கருவூர், உறையூர், சேய்ஞலூர், புகார்) ஒன்றாகவும் விளங்கியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நமது ஊரை பற்றி அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
திருவாரூர்: உலக மண் தின விழா கொண்டாட்டம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று (டிச.5) உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மண் வளத்தை காக்க செய்ய வேண்டிய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் தனுஷ்கோடி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி, கருணாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.


